மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், குற்றால மலை அருகில் அமைந்துள்ள அழகிய கிராமத்தில் பிறந்து, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், ஆனை மலை தொடரில் அணைக்கட்டுடன் கூடிய ஊரில் உறைவிடப் பள்ளியில் கல்வி பயின்று, கிழக்கு கடற்கரை ஓரம் பொறியியல் கல்லுரியில் கட்டடகலை இளநிலை, தமிழகத்தின் தலைநகரில் முதுநிலை முடித்து, இந்தியாவின் பெருநகரங்களில் பணிநிமித்தமாக நண்பர்களுடன் வாசம் செய்து, தற்சமயம் பாலைவனப் பிரதேசத்தில் பணிநிமித்தமாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.
இப்படியாக என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சுவராஸ்யமான நிகழ்ச்சிகளையும், அனுபவங்களையும், இனி வாழப்போகும் வாழ்க்கையின் நம்பிக்கைகளையும், எதிர்பார்க்கும் மாற்றங்களையும் பதிந்து வைத்துக் கொள்ளும் சிறு பெட்டக முயற்சியே இது.
06 January 2008
Subscribe to:
Posts (Atom)